சென்னை, ஆக. 9 - விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் உள்ள வேகத்தடையில், குழிகளை சீரமைக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
அறப்போர் இயக்கம் கடந்த 2 மாதங்களாக சென்னையில் உள்ள மோசமான, விதிகளை மீறி அமைக்கப் பட்ட வேகத் தடைகள், சாலையில் உள்ள சாக்கடை குழி மூடிகள் (மேன்ஹோல்) மற்றும் மழைநீர் வடி கால் குழிகள் (சில்ட் பிட்) ஆகிய வற்றை ஆய்வு செய்தது. இதில் சுமார் 100 தன்னார்வலர்கள் பங்கேற்று 467 இடங்களை ஆய்வு செய்துள்ளனர். அதாவது 201 வேகத்தடை, 205 சாக்கடை குழி மூடிகள், 61 சாலையில் உள்ள மழைநீர் வடிகால் குழிகளை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு முடிவுகளை முதல மைச்சர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ளது. அதன் சுருக்கம் வருமாறு:
இந்திய ரோடு காங்கிரஸ் (ஐஆர்சி) விதிப்படி ஒரு வேகத்தடை என்பது 10 செ.மீ.உயரத்திற்கு மேல் இருக்க கூடாது. அதன் அகலம் 3.7 மீட்டர் (12 அடி ) அளவிற்கு தான் இருக்க வேண்டும். வேகத்தடை மீது கருப்பு, வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டு இருக்க வேண்டும். 40 மீட்டருக்கு முன் அறிவிப்பு பலகை வைத்திருக்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்றா மல் 201 வேகத்தடைகள் உள்ளன.
விதிகளை பின்பற்றாத வேகத்தடை கள், வேகத்தை குறைத்து விபத்தை தடுப்பதற்கான பதிலாக விபத்தை உரு வாக்கக் கூடியதாக உள்ளது. சாலை களில் பயணிக்கும் மக்களின் உடல் நலத்தை தினந்தோறும் பாதிக்கும் ஒன்றாகவும் இது மாறி உள்ளது.
சாக்கடை குழி மூடிகள் மற்றும் சாலையில் உள்ள மழை நீர் வடிகால் குழிகள் பல இடங்களில் சாலை மட்டத்தை விட தாழ்வாக உள்ளது. இந்த குழிகள் பல நேரங்களில் விபத்தை உருவாக்கும் மரணகுழியாக மாறுகிறது. சாலை உயரத்தை அதி கரிப்பது, மூடிகளை சாலை மட்டத் திற்கு வைக்காமல் மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் இதற்கு முக்கிய காரணம். ஒரு சில இடங்களில் மூடிகள் சாலை உயரத்தை விட அதிகமாகவும் உள்ளது.
மாநகரம் முழுவதும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான ஆபத்தான நிலையில் உள்ள வேகத்தடை களையும், சாலையில் சாக்கடை குழி மூடிகள் மற்றும் மழை நீர் வடிகால் குழிகளையும் விதிப்படி சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.