ஏழுகிணறு பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்களில் உள்ள பாதாளசாக்கடை மேன்ஹோல்கள் உடைந்தும் திறந்தும் உள்ளன. மழைக்காலங்களில் இவை கண்களுக்கு புலப்படாததால் பொதுமக்கள், இருசக்கரத்தில் வருவோரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மாநகராட்சி மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் இதுகுறித்து கண்டுகொள்வதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.