விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் நடைபெற்ற தலித் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வட்டச் செயலாளர் கணேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் நாகேஷ்பாபு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.