தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் சென்னை, பிப்.25- சென்னை பள்ளிக்கரணையில் தலித் இளைஞர் சாதி ஆணவப் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு,பொதுச் செயலா ளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சென்னை, பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் கோபி மகன் பிரவீன்(22). தலித் சமுகத்தைச் சேர்ந்த இவ ரும் செங்கல்பட்டு மாவட்டம், ஜல்ல டையாம்பேட்டை பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த துரைக்குமார் மகள் ஷர்மிளா என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் 19.10.2023 அன்று சென்னை பெரியார் சுயமரியாதை திரு மண நிலையத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், நெடுங் குன்றத்தில் உள்ள பிரவீனின் சித்தி பவுர்ணமியின் வீட்டில் தற்காலிகமாக குடியிருந்து வந்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பு தான் சர்மிளா வின் கல்லூரி படிப்புக்காக பள்ளிக்கர ணைக்கு வந்துள்ளனர். ஆனால் சர்மிளாவின் வீட்டில் சாதி வெறி காரணமாக பிரவீனை கொலை செய்து விடுவோம் என தொடர்ச்சி யாக மிரட்டி வந்துள்ளனர்.
அவர்கள் கூறியது போலவே பிப்ரவரி 24 அன்று இரவு சர்மிளாவின் அண்ணன் தினேஷ் உள்பட சிலர் பிரவீனை கொடூரமாக படுகொலை செய்துள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங் களில் நடைபெற்று வந்த சாதி ஆண வப் படுகொலைகள் தற்போது தலை நகர் சென்னையிலும் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்து கிறது. இப்படுகொலையில் உரிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் உட னடியாக கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் குற்ற வாளிகள் பிணையில் வெளி வரு வதற்கு முன்பே வழக்கு விசாரணை யை முடித்து கடுமையான தண்ட னையை பெற்றுத்தருவதற்கு காவல் துறை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தி னருக்கு சட்டபூர்வமான தீர்வுதவி களை உடனடியாக வழங்க வேண்டும். தலைநகர் சென்னை வரை சாதி ஆண வப் படுகொலை நீண்டுள்ள நிலையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாதி ஆணவப்படுகொலைகளுக்கு எதி ரான தனிச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ள னர்.