tamilnadu

img

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு

சென்னை, ஜன.17-
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்வியாண்டு பாதிக்கு மேல் முடிந்துள்ளதால், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி 50 சதவிகித பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் இந்த குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பற்றிய முழு விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த விவரங்கள் நாளை மறுநாள் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கும் அறிவிக்கப்பட உள்ளன.
அதன் அடிப்படையில் இந்த கல்வி ஆண்டில் மீதம் இருக்கும் நாட்களில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;