த ற்போது நடைமுறையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 1983 இல் நிறைவேற்றப்பட்டது. அதற்கான சட்ட விதிகள் 1988இல் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இச்சட்ட விதி எண்97-ன்படிதான் தற்போதும் கூட்டுறவு ஊழியர்கள் போனஸ் பெற்று வருகிற நிலை என்பது இருக்கிறது.
ஏற்கனவே 1961 ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட சட்டத்தில் கூட்டுறவு ஊழிய ருக்கான போனஸ் மூன்று மாத அடிப்படைச் சம்பளம் அல்லது ரூபாய் 900. இதில் எந்த தொகை குறைவானதோ அத்தொகை போனஸ் வழங்கப்படும் என்று இருந்தது.
1988 இல் நிறைவேற்றப்பட்ட சட்ட விதி 97-இல் 3 மாத அடிப்படை சம்பளம் அல்லது ரூ.1200. இதில் எந்த தொகை குறைவான தொகையோ அத்தொகை போனசாக வழங்கப்படும் என்றுள்ளது. அப்போதைய அடிப்படை சம்பளம் ரூ.400 (3வது ஊதியக் குழு)
அடுத்த 4ஆவது ஊதியக்குழுவில் அடிப் படை சம்பளம் ரூ.1200ஆக மாறியது.
அடுத்த 5ஆவது ஊதியக்குழுவில் அடிப்படைச் சம்பளம் ஒரு ரூ. 4000 -100 -6000 ஆகமாறியது. 6ஆவது ஊதியக் குழுவில் அடிப்படைச் சம்பளம் ரூ.4200- 20200- தர ஊதியம் ரூ.2800 ஆகவும்
அடுத்த 7ஆவது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியம் ரூ15000 - 47600 என அடிப்படை ஊதியம் தொடர்ச்சியான மாற்றங்களை கண்டது.
ஆனால் கூட்டுறவு நிறுவனங்களில் 10 க்கும் குறைவாக பணியாற்றும் ஊழியர்க ளின் போனஸ் தொகையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
போனஸ் பட்டுவாடா சட்டத்தில் 2015இல் திருத்தம் கொண்டு வரப்பட்டுள் ளது. அதன்படி போனஸ் பெற தகுதியா னவர்களின் ஊதிய வரம்பு ரூ. 10,000 லிருந்து ரூ.21,000 ஆக மாற்றப்பட்டு உள்ளது. மேலும் போனஸ் கணக்கீட்டி ற்கு எடுத்துக் கொள்ளப்படும் தொகை ரூ.3500லிருந்து ரூ.7000ஆக உயர்த்தப் பட்டுள்ளது. இதன் காரணமாக கூட்டுறவு நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் ஊழியர்கள் சங்கம் நட்டம் எனில் ரூ. 8400/-(10 சதவிகிதம்), சங்கம் லாபம் எனில் ரூ.16800/-(20 சதவிகிதம்) போனஸ் பெறும் நிலை உள்ளது.போனஸ் சட்டத்தின் கீழ் வராத மாநில மற்றும் மத்திய வகை சங்க ஊழியர்களுக்கு ரூ.3000, தொடக்கநிலை சங்க ஊழியர்களுக்கு ரூ.2400-கருணை தொகையாக அறிவிக்கப் படுகிறது. இத்தகைய கருணைத்தொகை யும் கூட்டுறவு சட்டவிதி 97 இன் படி போனஸ் பெறக்கூடியவர்கள் தகுதி அல்லர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் இது குறித்தான தக வல்களை கோரும்போது நிதித்துறை, சட்டத்துறை வரை ஒப்புதல் பெற வேண்டி யுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் தொகை என்பது நிதித்துறைக்கு செலவினம் அல்ல. கூட்டுறவு சங்கங்கள் லாபம் எனில் கூட்டுறவு சட்டவிதி 97 இன்படி லாப பிரிவினையில் ஒதுக்கப்படும் தொகை மட்டுமே.இதனால் அரசுக்கு எவ்வித நிதிச்செலவினமும் இல்லை. ஆனால் கூட்டுறவு சட்டவிதி 97 திருத்தம் தொடர்பாக சட்டத்துறை , நிதித்துறை அனுமதி பெற்று சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள 35 ஆண்டு காலம் கடந்துவிட்டது.
எனவே, போனஸ் சட்ட விதியில் திருத்தம் மேற்கொண்டு கூட்டு றவு ஊழியர் அனைவருக்கும் குறைந்த பட்ச போனஸ் ரூ.8400/-வழங்கிடவும், போனஸ் சட்டத்தின் கீழ் வராதவர்களு க்கு கருணை தொகையாக (20சதம்) ரூ.16800/- வழங்கிடவும், இலாபம் ஈட்டி யுள்ள கூட்டுறவு நிறுவன ஊழியர்களு க்கு 20சதவீதம் போனஸ் வழங்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை வழங்கிட வேண்டும்.