tamilnadu

img

ஊரடங்கு மீறல்: ரூ.18 கோடியை தாண்டிய அபராதம்

சென்னை:
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 7 லட்சத்து 94 ஆயிரத்து 610 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இதுவரை 6 லட்சத்து 41 ஆயிரத்து 564 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாகவும், இவர்களிடமிருந்து 18 கோடியோ 39 லட்சத்து 3 ஆயிரத்து 791 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், வெளியே சுற்றி திரிந்த  8 லட்சத்து 72 ஆயிரத்து 653 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

;