கூட்டுறவு வங்கி செயலாளர்கள் மோசடி: விவசாயிகள் புகார்
கடலூர், ஜூன் 29- கடலூர் மாவட்ட விவ சாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜ கிருபாகரன், வேளாண்மை இணை இயக்குநர் ச.வேல் விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி கோ.மாதவன் பேசு கையில், மருதாடு 4 வழிச் சாலைக்காக விவசாயிகளின் அனுமதியில்லாமல் நிலத்தை கையகப்படுத்தக் கூடாது. பேருந்துகளில் நில வும் கட்டண குளறுபடியை நீக்க வேண்டும். விவசாயி கள் பெயரில் சர்க்கரை ஆலைகள் பெற்ற கடனை சர்க்கரை ஆலையின் பெய ருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தட்சிணாமூர்த்தி, மலட் டாற்றுடன் பெண்ணை யாற்றை இணைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார். வி.கே.குமரகுரு பேசுகை யில், மாவட்டத்திலுள்ள பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தேர்த லுக்குப் பின்னர் கூட்டுறவு கடன்கள் ரத்தாகிவிடுமென பல செயலாளர்கள் நினைத் தார்கள். எனவே ஒவ்வொரு சங்கத்திலும் ரூ.30 முதல் 40 லட்சம் வரையில் விவசாயி களுக்கே தெரியாமல் அவர் களது கணக்கில் கடன் பெற்றுள்ளனர். எனவே இது குறித்து விரிவான விசா ரணை நடத்த வேண்டும் என்றார். பாசிமுத்தான் ஓடை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.ரவீந்திரன், என்எல்சியிடம் நிதியைப் பெற்று மழைநீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் செறிவூட்டும் பணிகள் நடைபெறாததால் சுமார் 80 ஆயிரம் கிணறுகள் வறண்டு விட்டன. விவசாய நிலங்களை வளர்ச்சிப் பணி கள் என்ற பெயரில் கைய கப்படுத்தும் போது அவர்க ளது ஒப்புதலைப் பெற்று 4 மடங்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என்றார். கார்மாங்குடி எஸ்.வெங் கடேசன், விருத்தாசலம் திட் டக்குடி பகுதியில் தற் போது அறுவடை துவங்கி யுள்ளதால் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். என்எல்சியின் சமூக பொறுப் புணர்வு நிதியில் வயலூர் ஏரியைத் தூர் வார வேண்டும். விவசாயி சிறுப்பாக்கம் மணிகண்டன் பேசுகையில், டிராக்டர் கடனுக்கு விவசாயி களுக்கு மத்திய அரசும், காப்பீட்டு நிறுவனமும் உத்தரவாதம் அளிக்கும் போது ஏன் விவசாயிகளின் சொத்தை அடமானமாக கேட்க வேண்டும். எனவே வாங்கப்பட்ட சொத்து பத்தி ரங்களை திரும்ப வழங்க வேண்டும். படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு வழங்குவதாக அறி விக்கப்பட்ட நிவாரணத்தை விரைந்து வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சஸ்பென்ட்
விருத்தாசலம் குறிஞ் சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் ஒழுங்கீ னமாக நடந்துக் கொள்வ தாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனை யடுத்து, பேசிய துறையின் அதிகாரி, அவர் மிகவும் செல்வாக்கு பெற்றவர் என் றார். இதனால் அதிர்ச்சி யடைந்த ஆட்சியர் அந்த கண் காணிப்பாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
ஏரி, குளங்களை தூர்வார அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்
கடலூர், ஜூன் 29- தமிழ்நாடு அறிவியல் இயக்க கடலூர் மாவட்ட மாநாடு மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.பாலகுருநாதன் தலைமையில் பண்ருட்டியில் நடைபெற்றது. கிளை பொரு ளாளர் கே.பாலு வரவேற்றார். துணைச் செய லர் சுகந்தி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். செயலாளர் ஆர்.தாமோதரன் வேலை அறிக் கையையும், பொருளாளர் டி.ஜெயவீர பாண்டியன் வரவு - செலவு அறிக்கையை யும் சமர்ப்பித்தனர். கெளரவத் தலைவராக என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிதித் துறை முதன்மைப் பொது மேலாளர் எஸ்.மதிவா ணன், தலைவராக வி.என்.சுப்பிரமணியன், செயலாளராக ஆர்.தாமோதரன், பொருளாள ராக ஆர்.ஆரோக்கியதாஸ், துணைத் தலை வர்களாக எஸ்.பாலகுருநாதன், எம்.ராணி, எஸ்.விக்டர் ஜெயசீலன், துணைச் செயலர்க ளாக கே.பிரசன்னகுமார், கே.விஜயகுமார், கே.பாலு, ஒருங்கிணைப்பாளர்களாக கிராம மாணவர் திறன் ஊக்கத் திட்டதுக்கு கே.மண வாளன், என்சிஎஸ்சி கல்விக்கு பி.பேபி மாலா, வளர்ச்சிக்கு எம்.உதயேந்திரன், சமம் அமைப்புக்கு எஸ்.சீனுசிகாமணி உள்ளிட் டோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலச் செய லர் எம்.எஸ்.ஸ்டீபன் கலந்து கொண்டு மாநாட்டை நிறைவு செய்து பேசினார். துணைச் செயலர் கே.விஜயகுமார் நன்றி கூறினார். கடலூர் மாவட்டத்தில் மழை, வெள் ளத்தை எதிர்கொள்ளும் வகையில் 5 ஆறு களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ஏரிகள், தடுப்பணைகள், குளங் கள், கண்மாய்கள் அனைத்தையும் தூர்வார வேண்டும், மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் அறி விக்கப்பட்ட நவீன அறிவியல் மையத்தை விரைவில் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.