கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த 4 இடங்கள் தேர்வு
கடலூர், மார்ச் 20- கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த 4 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சி யர் வெ.அன்புச்செல்வன் வெள்ளியன்று (மார்ச் 20) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, வெளிநாடு களிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு 204 பேர் இதுவரை வந்துள்ளனர். அவர்களை குறிப்பிட்ட நாட்கள் கண்காணித்ததில் 46 பேருக்கு கரோனா பாதிப்பு இல்லையென தெரிய வந்துள்ளது. மீதமுள்ளவர்கள் வீட்டி லேயே கண்காணிப்பில் இருக்க வலியு றுத்தப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கோயில்களுக்கு வரும் 31ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தேவால யங்கள், மசூதிகளில் வழிப்பாட்டிற்கு கட்டுப் பாடு விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. எனி னும், தினசரி நடைபெற வேண்டிய பூஜைகள் மேற்கொள்ள தடை விதிக்கப்படவில்லை. வரும் 22ஆம் தேதி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டுமென பிரதமர் கேட்டுக் கொண்டுள் ளார். எனவே, பொதுமக்கள் வெளியே வராமல் இருந்து சுயக்கட்டுப்பாட்டினை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளி லும் ஹெல்ப் டெஸ்க் என்ற முறையை உரு வாக்கியுள்ளோம். அதில் மருத்துவமனைக்கு வருவோரின் ஆரம்ப நிலையை அறிந்து அதற்கேற்ப அவர்களுக்கு பதிலளிக்கப்ப டும். மேலும், நீரிழிவு, கிட்னி சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வாரந்தோறும் மாத்திரை வழங்குவதற்குப் பதிலாக 1 மாதம் வரை யில் மொத்தமாக வழங்க உத்தர விடப்பட்டுள்ளது. பெரிய உணவகங்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பார்சல் வழங்குவதற்கு தடையில்லை. 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை முன்வந்து மூட வேண்டும். வெளிநாடுகளி லிருந்து வந்தவர்களை கண்காணிப்பது போல், வெளி மாநிலங்களிலிருந்து வந்தி ருப்பவர்களையும் கண்காணிக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரைய 195 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். என்எல்சி நக ரியத்தில் கூடுதல் விழிப்புணர்வாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்ப டுத்தி சிகிச்சையளிக்கும் வகையில் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரத்தில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்கு உள்ளானவர்கள் கண்டறி யப்பட்டால் அவர்களுக்கு அங்கு வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
தனி அதிகாரி நியமித்து உரிமையாளர் பெயரில் ஆட்டோ உரிமம்: சிஐடியு
புதுச்சேரி, மார்ச் 20- தனி அதிகாரியை நியமித்து உரி மையாளர் பெயரில் ஆட்டோ உரி மைத்தை மாற்றித்தர வேண்டும் என்று புதுச்சேரி போக்குவரத் துறையை சிஐடியு வலியுறுத்தி யுள்ளது. சிஐடியு புதுச்சேரி பிரதேச ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.சீனுவாசன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் புதுச்சேரி போக்குவரத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது: பல ஆண்டுகளாக பல்வேறு கார ணங்களால் ஆட்டோ உரிமம் புதுப் பிக்கப்படாமல் உள்ளது. எனவே வாகனங்களை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்துவது, என அதற்கு தீர்வு காணும் வகையில் புதுச்சேரி போக்குவரத்துறை கடந்த 2ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் வெளி யிட்டுள்ள வழிகாட்டுதல்களை சிஐடியு சங்கம் வரவேற்கிறது. கடந்த காலங்களில் பர்மிட் புதுப்பித்தல் என்பது யார் பெயரில் இருந்தாலும் தற்போதைய உரிமை யாளர் அல்லது புரோக்கர் மூலம் சாதாரணமாக புதுப்பிக்கும் நடை முறையே இருந்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உரிமை யாளர் நேரில் வந்து, போக்கு வரத்துறை மண்டல அதிகாரி முன்ன ணியில் கையொப்பமிட வேண்டும் என்ற நிலைபாட்டிற்கு பின், சரி பாதிக்கு மேற்பட்ட வாகனங்கள் ஓட்டுநர்கள் பல்வேறு சிரமங்களை இன்றுவரை சந்தித்து வருகின்றனர். அதற்கு தீர்வு காண இயலாத நிலையில் தங்களின் சுற்றறிக்கை பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி யுள்ளது. எனவே அதற்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை யில் சிஐடியு சார்பில் சில ஆலோனை களை முன்வைக்கிறோம். உரிமை யாளர் வண்டிகளை விட்டுச் சென்ற நிலையில் அவரது தற்போதைய இருப்பிடம் தெரியவில்லை. பர்மிட் உரிமையாளர் இறந்து விட்டனர். பர்மிட் பல கைகள் மாறிய நிலை யில் உரிமையாளரை கண்டுபிடிக்க இயலாத சூழ்நிலை உள்ளது. வங்கி களில் கடன் மூலமாக வாங்கிய வாக னங்களை கடன் செலுத்த முடியாமல் என்.ஓ.சி. கிடைக்காமல் தற்போ தைய உரிமையாளர் பாதிக்கப்படு கிறார். எனவே பல ஆண்டுகளாக தீர்வு காணமுடியாமல் நீடிக்கும் இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வுகாண ஒரு தனி அதிகாரியை நியமித்து குறிப்பிட்ட நாட்களில் தற்போது பர்மிட் வைத்திருக்கும் உரிமையா ளர் பெயரில் பர்மிட்டை மாற்றித் தருவது சரியாக இருக்கும். இல்லா விடில் பழைய வாகனத்தின் ஆவ ணங்களை சரண்டர் செய்துவிட்டு புதிய வாகனம் வாங்கும் வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் பர்மிட் வழங்குவது சரியாக இருக் கும். இதுபோன்ற ஒரு முடிவினை முன்பிருந்த போக்குவரத்துறை ஆணையர் அனுமதி பெற்று ஒரு சிலருக்கு பர்மிட் வழங்கப்பட்டது. பிறகு அது குறித்து கவனம் செலுத் தாமல் கிடப்பில் போடப்பட்டது என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். இதுகுறித்து தங்களின் முயற்சி களுக்கு எங்களது சிஐடியு சங்கம் உறுதுணையாக இருக்கும் என தெரி வித்து கொண்டு, இந்த பிரச்சினையில் கூடுதல் கவனம் செலுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.
ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலைக்கு முயற்சி
திருவண்ணாமலை, மார்ச் 20- திருவண்ணாமலையில் ஆயுதப்படை பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவை சேர்ந்தவர் சுவாதி (25). இவர் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். திருவண்ணாமலை காந்தி நகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்த அவர் மனவேதனையுடன் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை(மார்ச்19) வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு காவலர் குடியிருப்புக்கு வந்த சுவாதி விஷம் குடித்து விட்டு, தனது தோழிகளுக்கு போன் செய்து தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள் விரைந்து வந்து காவலர் குடியிருப்பில் மயங்கி கிடந்த சுவாதியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, பணி அழுத்தத்தின் காரணமாக விஷம் குடித்தாரா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை: வங்கி ஊழியர் போக்சோவில் கைது
திருவண்ணாமலை, மார்ச் 20- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி யில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வங்கி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆரணி பகுதியை சேர்ந்தவர் 11 வயது மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் விட்டில் இருந்து வந்தார். அவரது பெற்றோர் ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அப்போது அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தார். ஆரணி நகரம் பிரகாஷ்நகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் மூர்த்தி (70). இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மூர்த்தி வீட்டின் வழியாக வந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத் காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் சிறுமியின் உடலில் காயங்கள் ஏற்பட்டது. வலியால் துடித்த சிறுமி வீட்டில் அழுது கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த சிறுமியின் பெற்றோர் சிறுமி அழுதுகொண்டி ருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து விசா ரித்தனர். விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பெற்றோர் சிறுமியை ஆரணி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து சிறுமியின் தாய் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையி னர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி மூர்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.