கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
கடலூர், ஜூலை 16- பொதுப்பட்டியலி லிருந்து கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தினார். தமிழக முன்னாள் முதல்வர் காமராஜ் பிறந்தநாளை முன்னிட்டு திட்டக்குடியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி மாலை அணிவித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாற்றி மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். அஞ்சல்துறை தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் எழுத அனுமதிக்க வேண்டும். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். சாதிய, மதவாத சக்திகள் அரசியல் தளத்தில் வலிமை பெற்று வருவதால் பிற்போக்குத்தனமான ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்டங்கள் கொண்டு வரவேண்டும் என்றார்.
காலமானார்
உளுந்தூர்பேட்டை, ஜூலை 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மாவட்டச் செயலாளருமான எம்..ஆறு முகத்தின் தாயார் எம்.கலியம்மாள் (92) திங்களன்று (ஜூலை 15) இரவு 10 மணியளவில் காலமானார். அவரது உடலுக்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சுப்பிரமணியன், எம்.கே.பூவ ராகன், டி.எம்.ஜெய்சங்கர், ஆர்.சீனிவாசன், டி.எஸ்.மோகன், எம்.செந்தில், ஏ.வி.ஸ்டாலின்மணி, எஸ்.வேல்மாறன், திமுக உளுந்தூர்பேட்டை நகரச் செயலாளர் டேனியல்ராஜ், காங்கிரஸ் கட்சியின் வட்டாரச் செயலாளர் குழந்தைவேலு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வழக்க றிஞர் தங்கரமேஷ் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். செவ்வாயன்று மாலை 5 மணியளவில் உ.கீர னூர் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கூட்டுறவு பட்டய பயிற்சி படிப்புக்கு தேதி நீட்டிப்பு
விழுப்புரம், ஜூலை 16- கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலை யத்தில் தற்போது 2019 – 20ஆம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிய கூட்டுறவு பட்டயப் பயிற்சி அவசியம். இப்பணியில் சேர கூட்டுறவு பட்டயப் பயிற்சி பெற்றவர்களையே நியமிக்க முடியும். இப்பயிற்சியில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பத்தாம் வகுப்பு, டிப்ளமோ படித்த ஆண், பெண் சேரலாம். 9 மாதம் பயிற்சிக் காலம். கட்ட ணம் 14 ஆயிரத்து 850 ரூபாயாகும். ஒரே பயிற்சியில் மூன்று சான்றிதழ்கள் (கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி, எம்.எஸ்.ஆபீஸ் மற்றும் நகை மதிப்பீடும் அதன் நுட்பங்க ளும் பயிற்சி) பெறலாம். இதற்கான சேர்க்கை தேதி வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், விபரங்க ளுக்கு விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், எல்லீஸ் சத்திரம் சாலை, வழுதரெட்டி என்ற முகவரியிலோ அல்லது 04146 259467, 96009 06017 என்ற எண்களில் தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.