tamilnadu

img

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - தண்டனை சட்டம் அமல்!

சென்னை,ஜனவரி.28- தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை சட்டம் அமலுக்கு வந்தது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு அதிக தண்டனை விதிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்ட திருத்தம் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அரசாணாஇ வெளியிட்டுள்ளது.
கடந்த 25ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அன்றைய தேதியில் இருந்து அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.