“2021 முதல் 20 ஆயிரத்து 162.44 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஜவுளித் துறையில் மட்டும் வந்து குவிந்திருக்கின்றன. ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட பயணங்கள் மூலம் மட்டும் 10 ஆயிரத்து 881.9 கோடி ரூபாய் முதலீடும், 17 ஆயிரத்து 371 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 10 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, 31 லட்சம் நபர்களுக்கு மேல் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலளித்துள்ளார்.