tamilnadu

img

ஓசூரில் வீடில்லா ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை வழங்குக சாராட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்

ஓசூரில் வீடில்லா ஏழைகளுக்கு  இலவச வீட்டு மனை வழங்குக  சாராட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, ஜூன் 4- ஓசூர் மாநகராட்சிப் பகுதியில் சொந்த வீடு மற்றும் நிலம் இல்லாத ஏழை மக்க ளுக்கு தமிழக அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சாராட்சியரிடம் 200 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. நகரின் மத்தியில் அமைந்துள்ள சாந்தி நகர், பெரியார் நகர் மற்றும் மூக்கண்டப்பள்ளி பகுதிகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள  மக்கள் குடியிருக்க சொந்த வீடு அல்லது நிலம் கிடையாது. எனவே, இந்த எளிய மக்களின் நிலைமை கருத்தில் கொண்டு சாராட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதில் ஓசூர் மாநகர செயலாளர் நாகேஷ் பாபு, ஒன்றியச் செயலாளர் தேவ ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாநகர குழு உறுப்பினர்கள் பி.ஜி.மூர்த்தி, ரவி, சீனி வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் விவசாயிகள் சங்க வட்ட தலைவர் ராஜா ரெட்டி, மாதர் சங்க மாவட்ட தலைவர் சரஸ்வதி, சிஐடியு மாவட்ட செய லாளர் ஸ்ரீதர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சாராட்சியர் மனுவை ஆய்வு செய்து தகுதியான பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்து அனுப்புவதாக உறுதியளித்தார்.