ராயபுரத்தில் வியாபாரி வீட்டில் ரூ.1 லட்சம் திருட்டு
சென்னை, ஜூன் 24- சென்னை ராயபுரத்தில் வியாபாரி வீட்டில் ரூ.1 லட்சம் திருடப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராயபுரம் வெங்கடாச்ச லம் தெருவைச் சேர்ந்தவர் சரத்பாபு. இவரது மனைவி ரம்யா (34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சரத்பாபு, சென்னை புறநகர் பகுதியில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். திரு வொற்றியூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ரம்யா வெளியே சென்று திரும்பும் போது வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த 1 லட்சம் ரூபாய், விலை உயர்ந்த செல்போன் ஆகியவை திருடப்பட்டி ருப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். இதுகுறித்து ரம்யா அளித்த புகாரின் பேரில், ராயபுரம் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்ஐடி மேம்பாலம் கீழே பேருந்து நிழற்குடை அமைத்திடுக! மாநகராட்சி கூட்டத்தில் சிபிஎம் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 24 - எம்ஐடி மேம்பாலம் கீழே பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 28வது வார்டு உறுப்பினர் ஜி.விஜயலட்சுமி வலி யுறுத்தி உள்ளார். தாம்பரம் மாநகராட்சி மன்றக் கூட்டம் செவ்வாயன்று (ஜூன் 24) மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடை பெற்றது. மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய ஜி.விஜயலட்சுமி, அனகா புத்தூர் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள் அகற்றப்பட்டு, கீரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மறுகுடிய மர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களது பிள்ளைகள் அனகா புத்தூரில் படித்து வருகின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல ஏதுவாக மாநகராட்சி பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். மறு குடியமர்வு செய்யப்பட்ட மக்களுக்கு ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் திருத்தம் செய்ய மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும். மேலும், முகவரி மாறியுள்ளதால், கல்வி கடன் கேட்ட விண்ணப்பித்த மாணவர்களுக்கு கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆணையர் வங்கிகளுடன் பேசி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.ஐ.டி., மேம்பாலத்தின் கீழ் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள், பல்லா வரத்தில் பழைய முறையில் வரியை கணக்கிடாமல், புதிய முறையில் வரி விதிக்கின்றனர். இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர். சிபிஎம் ஊழியர்கள் மீது தாக்குதல்: பெரும்பாக்கத்தில் கண்டன கூட்டம் சென்னை, ஜூன் 24 - மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், திண்டுக்கலில் சிபிஎம் ஊழியர்கள் மீது மதவெறியர்கள் நடத்திய தாக்கு தலை கண்டித்தும் திங்களன்று (ஜூன் 23) பெரும் பாக்கத்தில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் சோழிங்கநல்லூர் பகுதிக்குழு உறுப்பினர் கே.குண சேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஏ.சாந்தா தேவி, கோ. பூங்காவனம் மற்றும் ஜகாங்கீர் உள்ளிட்டோர் பேசினர்.
இரும்பு கேட் சரிந்து விழுந்து காவலாளி பலி
சென்னை, ஜூன் 24- மணலி புதுநகரை அடுத்த வெள்ளிவாயல் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 64). இவர் விச்சூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் காவலர் பணி செய்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி ஆலையின் பிரதான இரும்பு கேட்டை மூடும்போது எதிர்பாராத விதமாக கேட் அடியோடு சரிந்து குமாரசாமி மேல் விழுந்தது. இதைப்பார்த்த அருகில் இருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து கேட்டுக்குள் சிக்கிய குமாரசாமியை வெளியே எடுத்தனர். இதில் கால், மார்பு பகுதியில் அடிபட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்த குமாரசாமியை சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவ மனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குமாரசாமி திங்களன்று அதிகாலை சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை புறநகர் மின்சார ரயில்கள் 12 பெட்டிகள் கொண்டதாக மாற்றம்
சென்னை, ஜூன் 24- சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப் பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 9 பெட்டி களாக இருந்த புறநகர் ரயில்கள் 12 பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது. கடற்கரை- செங்கல்பட்டு, சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல்- அரக்கோணம் இடையேயான ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
மதுரவாயல் பைபாஸ் சாலையில் கார்கள் மோதல்: இருவர் பலி
சென்னை, ஜூன் 24- அனகாபுத்தூர் அருகே மதுபோதையில் எதிர்திசையில் தவறாக வந்த கார் நேருக்கு நேர் மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் தந்தையும், மகளும் உயிரிழந்தனர். மதுரவாயல் புறவழிச்சாலையில் திங்களன்று இரவு, போரூரில் இருந்து தாம்பரம் நோக்கி வாடகை கார் மூலம் பத்மநாபன் என்பவர் அவருடைய மனைவி, கர்ப்பிணி மகளுடன் பயணம் செய்தார். காரை மணிகண்டன் என்ற ஓட்டுநர் குடிபோதையில் இயக்கியதாக தெரியவந்தது. அப்போது அவ்வழியாக வந்த கார் மீது மணிகண்டன் ஓட்டிய கார் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த அனைவரும் பலத்த காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த பத்மநாபன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். அவரது மகள் 3 மாத கர்ப்பிணி தீபிகா (23), மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த பத்மநாபன் மனைவி மற்றும் கார் ஓட்டுனர் இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.