சென்னை, நவ. 17 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வேலூர்- திருப்பத்தூர் மாவட்டத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான தோழர் ப. சக்திவேல் (வயது 56) நவம்பர் 17 அன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், தோழர் ப.சக்திவேலின் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாகவும் அவரது மறை விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
“தோழர் சக்திவேல் வாலிப பருவத்தி லிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்தில் வாலிபர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கத்தை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றியவர். விவசாயிகளின் நலன்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். அவ ருடைய மறைவு விவசாயிகள் இயக்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஏற்பட்ட பேரி ழப்பாகும்” என்றும் குறிப்பிட்டுள்ள கே.பால கிருஷ்ணன், தோழர் சக்திவேல் மறைவால் துய ருற்றுள்ள அவரது மனைவி, மகன்கள் மற்றும் வேலூர்-திருப்பத்தூர் மாவட்ட தோழர்களுக்கு கட்சியின் மாநில செயற்குழு தனது அனு தாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது” என்று கூறியுள்ளார்.