மின் கட்டண உயர்வை கைவிடவேண்டும், மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வடசென்னை மாவட்டம் ஆவடியில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜ், மத்திய சென்னை மாவட்டம் ஆயிரம் விளக்கில் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் மாவட்டச்செயலாளர் எஸ்.கோபால் கடலூரில் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், வேலூரில் மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி, ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் எஸ்.கிட்டு, காஞ்சிபுரத்தில் மாவட்ட செயலாளர் சி.சங்கர், விழுப்புரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.