tamilnadu

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்க சிபிஎம் மனு

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் 
நடவடிக்கை எடுக்க  சிபிஎம் மனு

பி.மூட்லூர் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் மீது தாக்குதல் நடத்தியவர் களை கைது செய்யக் கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் கோ.மாதவன் தலைமையில் மாநிலக் கழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, பரங்கிப்  பேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் விஜய், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெய சீலன் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை கடலூரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், பரங்கிப்பேட்டை ஒன்றியம் பி.முட்லூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வர், கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர், கட்டுமான சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வரும் என்.ஜெயசீலன், இம்மாதம்  17 ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வயலா மூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று ள்ளார். அப்போது, குடிபோதையில் வந்து வாகனத்தை வழிமறித்து வல்லத்தை சேர்ந்த வெங்கடேசன், பிரவின்குமார், விக்னேஷ், கமலகண்ணன் ஆகிய 4 பேரும் சேர்ந்து கொடூரமான முறையில் தாக்கி யுள்ளனர்.  இதில் படுகாயமடைந்த ஜெய சீலன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இது குறித்து ஏப். 18 அன்று காவல் பரங்கிப் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.பிறகு, விசாரணை செய்த காவல்துறையினர் வெங்கடேசனை மட்டும் கைது செய்துள்ளனர். இதற்கிடையில், இந்த சம்பவத்தை திசை திருப்பும் வகையில் வல்லம் பொதுமக்கள் என்ற பெயரில் சமூக வலைதளத்தில்  ஜெய சீலன் போதையில் ஒரு பெண்ணை அடித்து துன்புறுத்தியதாகவும், அதைக் கேட்க வந்த இளைஞர்கள் மீது பொய்பு கார் கொடுத்துள்ளதாகவும், அவரே கீழே விழுந்து  காயத்தை ஏற்படுத்திக் கொண்டதாகவும் அவரது புகைப்படத்துடன்  அவதூறு பரப்பி வரு கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 30 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார் இவர், பி.முட்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக  இருந்தபோது பொது மக்க ளின் பிரச்சினைகளில் சாதிய பாகுபாடு இல்லாமல் அனைவருக்குமான தலைவ ராக  செயல்பட்டவர். இதை அப்பகுதி மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, திட்ட மிட்டு களங்கம் விளைவிக்கும் நோக்கில் தவறான செய்திகளை பரப்புரை செய்து ஒருவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதள பக்கங்க ளில் உள்ள தவறான பதிவுகளை நீக்க வேண்டும். தாக்குதல் நடத்திய அனைவரை யும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது