ஆர்.கே.நகர் 41ஆவது வட்டம் கண்ணகி நகர் மற்றும் கருமாரியம்மன் நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாமன்ற உறுப்பினர் பா.விமலா அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். சிபிஎம் பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், நிர்வாகி ஜோதிபாசு ஆகியோர் உடன் இருந்தனர்.