tamilnadu

img

எழுத்தாளர் செயப்பிரகாசம் மறைவிற்கு சிபிஎம் இரங்கல்

சென்னை,அக்.25- விடுதலைப் போராட்ட வீரர் திண்டுக் கல் தோழர் அறம் மற்றும் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் ஆகியோர் மறை வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு

தோழர் அறம்

தோழர் அறம் அவர்கள் திங்க ளன்று காலை திண்டுக்கல்லில் கால மானார். அவருக்கு வயது 91. தோழர் அறம், விடுதலைப் போராட்ட வீரர். இளம் வயதிலேயே பொதுவுடைமை இயக்கத்துடன் தன்னை பிணைத்துக் கொண்டவர். ஆசிரியராக பணி யாற்றிக் கொண்டிருந்தபோதே, கட்சிப் பணி ஆற்றியவர். இதனால் பழி வாங்கும் நடவடிக்கையாக பல ஊர் களுக்கு மாற்றப்பட்டவர். தலைமறைவு காலத்தில் கட்சி தலைவர்களை பாது காத்தவர். தோழர் ஏ.நல்லசிவன், வே. மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட தலை வர்களின் நெருங்கிய சகா தோழர் அறம். ஏராளமான இளைஞர்களை இடது சாரி இயக்கத்துக்குள் ஈர்த்தவர். பணி ஓய்வுக்கு பிறகு தீக்கதிர் நாளேட் டிற்கு ஏராளமான கட்டுரைகளை மொழி பெயர்த்து தந்தவர். தன்னுடைய இறுதி நாட்கள் வரை உறுதியான மார்க்சிஸ்டாக திகழ்ந்த தோழர் அறம் மறைவு கட்சிக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்

இடதுசாரி எழுத்தாளர் தோழர் பா.செயப்பிரகாசம் அவர்கள், மாண வப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்பு  போராட்டத்தில் பங்கேற்று தேசிய பாது காப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டவர். கரிசல் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். பா.செயப்பிரகாசம் என்ற பெயரி லும், சூரியதீபன் என்ற புனைபெயரி லும் கவிதை, சிறுகதை, நாவல், கட்டு ரைகள் என எழுதிக்குவித்தவர். சிறு கதை துறையில் காத்திரமான பங்க ளிப்பைச் செய்தவர். மொழி உரிமைக் காகவும், மாநில உரிமைகளுக்காகவும் இடையறாது களமாடி வந்தவர். தன்னு டைய இறுதிக்காலத்தில் தமுஎகச வோடும், செம்மலர் ஏட்டோடும் தம்மை  நெருக்கமாக பிணைத்துக் கொண்ட வர். அரசு உயர் பொறுப்பில் இருந்தபோ தும் பாட்டாளி மக்களுக்காகவே பாடு பட்டவர். அவரது மறைவு இடதுசாரி இலக்கியத்திற்கும், இயக்கத்திற்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.