tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பேராயர்  எஸ்றா சற்குணம் மறைவுக்கு சிபிஎம் இரங்கல்

சென்னை, செப். 25 - பேராயர் எஸ்றா சற் குணம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலா ளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை விடுத்துள் ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:

“இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவரும், ஈசிஐ பேராயருமான எஸ்றா  சற்குணம் (86) அவர்களின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் சிறு பான்மை மக்களின் நலன் களுக்காகவும், உரிமைகளுக் காகவும் அயராது பாடுபட்ட வர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் மத நல்லி ணக்கம் வலியுறுத்தி நடத்திய பல்வேறு இயக்கங்களில் பங்கெடுத்தவர். அவரது மறைவு ஜனநாயக சக்தி களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவரது மறைவால் துய ருற்றுள்ள குடும்பத்தார், ஆதரவாளர்கள், உற்றார் உறவினர் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த  இரங்கலையும், வருத்தத் தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் குறிப் பிட்டுள்ளார்.

இலங்கை  நாடாளுமன்றம் கலைப்பு! 

கொழும்பு, செப். 25 - இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க செவ்வாய்க்கிழமையன்று அந்நாட்டு நாடாளுமன்றத் தை கலைத்து உத்தர விட்டுள்ளார். 

நாடாளுமன்றம் நிறை வடைய இன்னும் 11 மாதங் கள் இருக்கும் நிலையில், பிர தமராக இருந்த தினேஷ் குணவர்த்தன ஞாயிறன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இடைக்காலப் பிரதமராக ஹரிணி அமரசூரியாவை நியமனம் செய்த ஜனாதி பதி அனுர குமார திஸாநா யக்க, தற்போது நாடாளு மன்றத்தைக் கலைத்து உத் தரவிட்டுள்ளார். அத்துடன், நவம்பர் 14-ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.