கிருஷ்ணகிரி டிச. 31- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலைப்பகுதியான உரிகம் ஊராட்சி ஈரண்ணதொட்டி கிராமத்தில் 37 க்கும் மேற்பட்ட மலை வாழ் குடும்பங்கள் பல தலைமுறை களாக வசித்து வருகின்றனர்.
இங்குள்ள சிக்கமாதப்பா தனது மனைவி சுதா (25) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கூலி வேலை செய்து வாழ்ந்து வரு கிறார். கடந்த 24 ஆம் தேதி இரவு 8 மணிக்கு அஞ்செட்டி வன சரகத்திற்கு உட்பட்ட வனத் துறையை சேர்ந்த குமார், தாமோதரன், தமிழ்வாணன், ஆர். குமார் உள்ளிட்ட 5 பேர் ஈரண்ண தொட்டி சிக்கமாதப்பா வீட்டிற்கு சென்றனர்.
அதிகாரி குமார் என்பவர் உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும், உட்கார நாற்காலி கொடு என சுதாவிடம் கேட்டுள்ளார். அவர் தன் வீட்டில் நாற்காலி இல்லை என்று கூறியதும் பக்கத்து வீட்டின் கதவை தட்டியுள்ளனர். வெளியே வந்த தாய்முத்தம்மா என்பவர் தனது கணவர் வெளியே சென்றுள்ளதால் பிறகு வாருங்கள் என்று கூறியதும் வனத்துறையைச் சேர்ந்த குமார் தாய்முத்தம்மா கழுத்தை பிடித்து நெறித்து, ‘உனக்கு இவ்வளவு திமிராடி உட்கார நாற்காலி தரவில்லை என்றால் கொன்று விடு வேன்’ என மிரட்டியதால் பயந்து போன தாய்முத்தம்மா நாற்காலியை வெளியே எடுத்து வந்து போட்டுள்ளார். இதுகுறித்து தன் கணவருக்கு தெரிவிப்பதற்காக தாய்முத்தம்மா செல்போனை எடுத்ததும் வனத்துறையை சேர்ந்த,குமார் உன் புருஷனுக்கா சொல்ற என்று மிரட்டி போனை பிடுங்கி வைத்துள்ளார்.
அப்பொழுது தாமோதரன்,ஆர்.குமார் சுதாவை கீழே தள்ளிவிட்டு வீட்டின் உள்ளே சென்றனர். உடனே சுதா என் கணவர் இல்லாத நேரம் வந்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டதும் ‘பஜாரி மகளே காட்டில் வேட்டையாட வீட்ல துப்பாக்கி யும் வெடி மருந்தும் வைத்திருக் கிறீர்களே அதைத் தேடி எடுப்ப தற்கு தான் வந்துள்ளோம்’ என கூறி சுதாவை மார்பை தொட்டு உள்ளே தள்ளி கொண்டு சென்ற னர். அவர்களது கையை தள்ளி விட்டு என்னை இப்படி ஏன் தள்ளு கிறீர்கள் என்று அவர் கேட்டதற்கு உன்னை தொட்டு பேசினால் என்னடி ஆயிடப்போகுது ,நீங்கள் எந்த தப்பும் செய்யலையாடி, நாங்க தொட்டால் தான் உங்க ளுக்கு மானம் போகுதாடி, உங்க புருஷங்க இல்லாட்டி என்னடி, என மீண்டும் மார்பில் இரண்டையும் கையை வைத்து தள்ளி பூட்ஸ் காலால் சுதாவை மிதித்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றனர்.
வீட்டுக்குள் புகுந்த வேகத்தில் ராகி, அரிசி,பருப்பு எல்லா வற்றையும் கீழே கொட்டி இறைத்து அங்கிருந்த தட்டு முட்டு சாமான்கள் அனைத்தையும் வீ‘சி எறிந்து விட்டு உன்னை என்ன செய்கிறோம் பாரடி என்று கூறியபோது அச்சத்தில் சுதா கூச்சல் போடவே அதிகாரிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து காரை எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது தாய்முத்தமாவும் சுதாவும் செல்போனை திருப்பிக் கொடுத்து விட்டு செல்லுங்கள் என அதிகாரியிடம் கேட்டபோது அதி காரிகள் மூவரும் மிகக் கடுமை யாகவும் மிரட்டியதோடு எங்கள் அதிகாரம் என்னவென்று தெரியுமா? உங்களை என்ன செய்கிறோம் பாருங்கடா, நாங்கள் நினைத்தால் நீங்கள் யாரும் இங்கு உயிரோடு வாழவே முடியாது,காலையில் உரிகம் காவல் நிலையத்தில் வந்து அனைவரும் ஆஜராகி மன்னிப்பு கேட்டு எங்களிடம் கப்பம் கட்டி விட்டு செல்லுங்கள் என்று மிரட்டினர்.
அப்போது தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறை உயர் அதிகாரி நடந்த சம்பவத்துக்காக பாதிக்கப்பட்ட மக்க ளிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தி வனத்துறையி னரை அழைத்துச் சென்றார். வனத்துறையினர் தள்ளியதால் கீழே விழுந்த சுதா உடல்நிலை பாதிக்கப்பட்டார். உரிகம் பகுதி யில் யானையின் நடமாட்டம் அதிக மாக இருப்பதால் இரவில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அடுத்த நாள் தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு விசாரணைக்கு வந்த காவல்துறை அதிகாரியும் சுதாவின் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்து ஒப்புக்கு வழக்கு பதிவு செய்துள்ளார்.
தகவல் அறிந்த தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் குமார வடி வேல்,விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், அஞ்செட்டி மார்க்சிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் தேவராஜ்,பாதிக்கப்பட்ட சுதா, தாய்முத்தம்மா ஆகியோரை நேரில் சந்தித்துப்பேசினர். அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்கள் குடும்பத்தினருடன் சென்று தேன்கனிக்கோட்டை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் வனத்துறை யினரின் அத்துமீறல்கள் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளித்தனர்
மலைவாழ் மக்கள் வீடுகளில் இரவில் அனுமதி இன்றி அத்துமீறி நுழைந்து விசாரணை என்ற பெயரில் பெண்களை தாக்கிய தோடு பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு அவர்களை மிரட்டிய தற்காகமான பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறை அதிகாரி அஞ்செட்டி காவல்துறை ஆய்வாளரிடம் சம்பவம் குறித்து கூறி சரியான வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்வதாக உறுதி யளித்தார். காவல்துறை அதிகாரிக ளுடனான பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ராசா, அஞ்செட்டி ஒன்றிய செய லாளர் தேவராஜன்,மாவட்டக் குழு உறுப்பினர்கள் அனுமப்பா, சீனி வாசன்,விவசாயிகள் சங்க நிர்வாகி முரளி உடன் இருந்தனர்.