கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிபிஎம் கிளர்ச்சி பிரச்சாரம் நிறைவு
கிருஷ்ணகிரி, ஜூன் 20- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஒன்றிய குழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் செயலாளர் ராஜா தலைமையில் நடை பெற்றது. இதில், குல்லட்டி கிராமத்தில் மூன்று தலைமுறைகளை கடந்த பொரு ளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் பட்டியல் இன பழங்குடி மக்கள் சொந்தமாக குடியிருக்க இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தேன்கனிக்கோட்டை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த மனுக்களை பரிசீலித்த ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இந்த பிரச்சாரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், சி.பி.ஜெயராமன், மகாலிங்கம் ஜி.கே. நஞ்சுண்டன்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, நடராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் இருதயராஜ், அனுமப்பா, ஒன்றியச் செயலாளர் ஆர்.கே. . தேவராஜ், தேன்கனிக்கோட்டை வட்ட மூத்த தலைவர் நாகராஜ்ரெட்டி, முன்னாள் செயலாளர் சேதுமாதவன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் சரஸ்வதி கலந்து கொண்டனர். மாநகர குழு உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார். அஞ்செட்டி வட்டத்தில் செயலாளர் தேவராஜன் தலைமையில் நாட்ராம்பள்ளி, மாசாநெட்டி,கோட்டையூர்அஞ்செட்டி யில் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டச் செய லாளர் சி.சுரேஷ் செயற்குழு உறுப்பினர் பிரகாஷ்,வட்ட குழு உறுப்பினர்கள் குமாரவடிவேல், கிருஷ்ணன், கோவிந்த சாமி, சாந்தலிங்கம்,தர்மலிங்கம், நாராய ணன் கலந்து கொண்டனர். ஓசூரில் மார்க்சிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் நாகேஷ் பாபு தலைமையில் மக்கள் கோரிக்கை இயக்க நிறைவு நாள் பிரச்சாரம் நடைபெற்றது. அசோக் லேலண்ட் தொழிற்சாலை வாயில் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்ரீதர் முன்னிலையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாநகர குழு மணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், துணைத் தலைவர் பி.ஜி.மூர்த்தி, மாதவன், சீனிவாசன், சிஐடியு அணி செயலாளர் தரணியன், பாட்ஷா, வேலு, தரணி, முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மக்கள் கோரிக்கை பிரச்சார இயக்கம் ஊத்தங்கரை வட்டத்தில் ஆனந்தூர் ரெட்டிபட்டி பகுதியில் துவங்கி ஊத்தங்கரையில் முடிவுற்றது.பிரச்சாரத்திற்கு வட்டச் செயலாளர் சபாபதி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.கே.நஞ்சுண்டன்,மாவட்ட குழு உறுப்பினர் கோவிந்தசாமி வட்ட நிர்வாகிகள் லெனின்,செல்வராஜ், எத்தி ராஜ், முத்துக்குமார் கலந்து கொண்டனர்.