மதுராந்தகம், ஜூலை 3- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வந்த மருத்துவர் சுகுமார் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். கடந்த வாரம் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொற்று பாதிப்பு அதிகமானதால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று (ஜூலை 3) உயிரிழந்தார். மதுராந்தகத்தில் மருந்து கடை உரிமையாளர் பாலாஜி தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.