சென்னை, மார்ச் 24 - கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவக் கூடியது. சமூக பரவல் (கம்யூனிஸ்ட்டி ஸ்பிரெட்) ஏற்பட்டால் கட்டுப்படுத்த முடியாது. எனவே, மக்கள் விழிப்போடு, தனித்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் செவ்வாயன்று (மார்ச் 24) கொரோனா தொடர்பாக அவர் அளித்த விளக்கம்: உலகம் முழுவதும் 186 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. தற்போது வரை 3 லட்சத்து 32 ஆயிரத்து 970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்க ளில் 14 ஆயிரத்து 525 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் 443 பேர் பாதிக்கப்பட்டு 9 பேர் இறந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து 12ஆயிரத்து 519 பேர் தமிழ கத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் 14 நாட்கள் தனிமை யில் இருக்க வேண்டும். தில்லியிலிருந்து ஈரோட்டிற்கு வந்த ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவருடன் தொடர்புடைய 193 பேர் கண்டுபிடித்து பரிசோதித் துள்ளோம். கொரோனா வல்லரசு நாடுகளையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மேலைநாடுகளில் கூட படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும் தன்னை தயார்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஓமந்தூ ரார் மருத்துவமனையில் 300 படுக்கைகள் தயார் செய் யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் குறிப்பிட்ட அளவு படுக்கைகளை ஒதுக்கி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் விழிப்போடு வீட்டிலேயே இருக்க வேண் டும். வெளியே செல்லக்கூடாது. சமூகத்தோடு தொடர்பு கொள்ளக்கூடாது. அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்து ழைக்க வேண்டும். அரசு எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது. எனவே, விழித்திருங்கள், தனித்தி ருங்கள், வீட்டிலேயே இருங்கள் என்றார்.