சென்னை, மார்ச் 18- கொரோனா முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக சென்னை தி.நகரில் மக்கள் அதி கம் கூடும் பகுதியான ரங்கநாதன் தெருவில் உள்ள பெரிய கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன, இந்த பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதா என்றும், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகி யோர் புதனன்று (மார்ச் 18) காலை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் வருவாய்த் துறையும் சுகாதாரத் துறையும் இணைந்து நடவடிக்கை களை தொடர்ந்து மேற்கொண்டு வருகி றோம். அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டு வருகிறோம், முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். சாதாரண கடைகளை தொந்தரவு செய்ய வில்லை. 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கும் இடம், நெரிசல் மிகுந்த கடைகளை, வணிக வளாகங்களை மட்டுமே மூடுமாறு அறி வித்துள்ளோம். வியாபாரிகளுக்கு ஏற் பட்டுள்ள அச்சத்தைப் போக்கும் விதமாக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதனை அவர்களும் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது அதனடிப்படையில் அனைத்து நடவ டிக்கைகளையும் எடுத்து வருகிறோம். கை கழுவும் பழக்கத்தை தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும், தேவையற்ற அச்சத்தை தவிர்க்க வேண்டும். இந்த நோயின் தாக்கத்தை பொதுமக்கள் புரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். சமூக வளைதலங்களில் தேவை யற்ற வதந்திகளை பரப்பி பீதியை ஏற்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி பூச்சி தடுப்புத் துறை அதிகாரிகள், தி.நகர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், அடைக்கப் பட்டுள்ள கடை வீதிகளை கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் வகையில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தனர். ரங்கநாதன் தெருவில் மேற்கொண்ட இந்த சுத்தம் செய்யும் பணியில், விவசாயத்தில் பூச்சி மருந்து தெளிக்க பயன்படுத்தக் கூடிய ரக்ஷாக் 400 என்ற எந்திரத்தினை பயன்படுத்தி னர். பட்டாம்பூச்சி தெளிப்பான் முறையில் இயங்கும் இந்த எந்திரம் கொண்டு 8 மீட்டர் தூரம் வரை கிருமி நாசினி மருந்தினை தெளிக்க முடியும். சென்னையில் மக்கள் அதி கம் கூடும் மற்ற பகுதிகளிலும் இந்த எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக விவ சாயத்திற்கு பயன்படும் இந்தவகை தொழில் நுட்பத்தை சுகாதாரத்தை பேணுவதற்காக சென்னை மாநகராட்சி பயன்படுத்தி வருவ தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.