சென்னை, ஜூன் 4- தமிழகத்தில் தொடர்ந்து ஆயிரம் ஆயிரமாக கொரோனா தொற்று எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. திங்கள் முதல் வியாழன் வரை மட்டும் 4 ஆயி ரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். ஐந்தாம் கட்ட ஊரடங்கு தொடங்கிய முதல் நாள் கொரோனா பாதிப்பு ஆயி ரத்தை தாண்டியது. இரண்டாவது நாளான செவ்வாயக்கிழமையும் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியநிலையில், புத னன்றும் பாதிப்பு எண்ணிக்கை ஆயி ரத்தை தாண்டியுள்ளது. மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாழனன்று (ஜூன் 4) ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
12 பேர் உயி ரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,256 ஆகவும், பலி எண்ணிக்கை 220 ஆகவும் அதிகரித் துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:- தமிழகத்தில் வியாழனன்று மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 27,256 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 73 பரிசோதனை மையங் கள் மூலமாக வியாழனன்று 15,999 நபர்களின் மாதிரிகள் சோதனை யிடப்பட்டுள்ளது. வியாழனன்று 585 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 14,901 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 12,132 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,506 பேர், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 23,038 பேர், 60 வயதை கடந்தவர்கள் 2,712 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக முடிவு இல்லை
வியாழனன்று சுகாதாரத்துறை மாவட்ட வாரியாக எவ்வளவு ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்படுகிறது. எத்தனை நபர்களுக்கு சோதனை செய்யப்பட்டது என்ற புள்ளிவிபரத்தை கொடுக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் சமூக பர வலை கொரோனா அடையவில்லை என் பது கவனிக்கத்தக்கது.