tamilnadu

img

கொரோனா வைரஸ் எதிரொலி...  தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் பதிவு நிறுத்தம்

சென்னை
வெளிநாடுகளிருந்து வரும் பயணிகளால் இந்தியாவில் கொரோனா வைரஸ் லேசான வேகத்தில் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43-யை தண்டியுள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி ஆலோசித்து வருகிறது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் (கைரேகை பதிவு)  வருகைப் பதிவு நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. மார்ச் 31-ஆம் தேதி வரை பயோமெட்ரிக்கில் பதிவு செய்யத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே தில்லியில் உள்ள பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழ்நாடும் இணைந்துள்ளது.  

;