சென்னை:
தமிழகத்தில் கொரோனா அதன் வீரியத்தை காட்டத் தொடங்கிவிட்டது. சென்னையில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மாநிலம் முழுவதும் சனிக்கிழமை தொற்றால் பாதிக்கப்பட்டோர் 231. இதையடுத்து மொத்த எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை1,257 ஆக அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை 10,127 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன. மொத்த சாம்பிள்கள் சோதனை 1,39,490. நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில் 1,30,132 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. 45 இடங்களில் தொற்று ஆய்வகங்கள் உள்ளன. வீட்டுக் கண்காணிப்பில் 35,418 பேர் உள்ளனர். கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2,099 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசுக் கண்காணிப்பில் 40 பேர் உள்ளனர். சனிக்கிழமை 29 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,341 பேர் குணமடைந்துள்ளனர். வீடு திரும்பியவர்கள் தவிர 1,183 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உள்ளது.
வெள்ளிக்கிழமை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகபட்சமாக சென்னையில் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த எண்ணிக்கை 1,257 ஆக அதிகரித்துள்ளது. அரியலூரில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.செங்கல்பட்டில் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது,
மதுரையில் ஒருவர் பேர் பாதிக்கப்பட்டுள்ளார். மொத்த எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது. பெரம்பலூர், இராமநாதபுரம், விழுப்புரம், கடலூரில் தலா இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், ஆகியவற்றில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒரு வயது முதல் 12 வயது வரையிலானவர்கள் 159 பேர். இதில் பெண்கள் 83 பேர். ஆண்கள் 76 பேர். 13 வயது முதல் 60 வரையில் பாதிக்கப்பட்டவர்கள் 2,318 பேர். பெண்கள் 1,554 பேர். ஆண்கள் 763 பேர். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 280 பேர். பெண்கள் 191 பேர். ஆண்கள் 89 பேர்.