தமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 5,75,017 ஆக தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுவரை 5,19448 குணமடைந்துள்ளனர். இன்று 85 பேர் உயிரிளந்துள்ளனர். தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 9,233 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 46,336 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உலகம் முழுவதும் 3 கோடியே 20 லட்சம் பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 லட்சத்தை
கடந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 48 லட்சமாக உள்ளது.