tamilnadu

img

தமிழக ஆளுநர் மாளிகையில் 84 சிஆர்பிஎப் வீரர்களுக்கு கொரோனா தொற்று...  

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பரவல் வேகத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினாலும், கொரோனா வைரஸ் என் வழி தனி என்ற போக்கில் தான் பயணித்து வருகிறது.    

இந்நிலையில், தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் பணியாற்றும் 140-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 84 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையெடுத்து ஆளுநர் மாளிகை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் மாளிகை சென்னை கிண்டியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

;