சென்னை, ஆக. 24 - சென்னையில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேக மெடுக்க தொடங்கியுள்ளது. சென்னையில் 1 லட்சத்து 24 ஆயி ரத்து 71 பேர் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 545 பேர் குண மடைந்தனர். 2564 பேர் இறந்தனர். சிகிச்சையில் 12 ஆயிரத்து 962 பேர் உள்ளனர். இதில் திருவெற்றியூர் மண்ட லத்தில் 262 பேர், மணலியில் 143 பேர், மாதவரத்தில் 612 பேர், தண்டை யார்பேட்டையில் 713 பேர், ராய புரத்தில் 783 பேர், திரு.வி.க.நகரில் 885 பேர், அம்பத்தூரில் 1311 பேர், அண்ணா நகரில் 1480 பேர், தேனாம்பேட்டையில் 841 பேர், கேடம்பாக்கத்தில் 1544 பேர், வளசர வாக்கத்தில் 1190 பேர், ஆலந்தூரில் 557 பேர், அடையாறு மண்டலத்தில் 1399 பேர், பெருங்குடியில் 532 பேர், சோழிங்கநல்லூரில் 460 பேர், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 250 பேர் சிசிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கி யது. இதனால் தொற்று பாதிப்பு 7 சதவீதமாக இருந்தது. தற்போது மீண்டும் கொரோனா பரவல் வேக மெடுக்க தொடங்கியுள்ளது. இத னால் பாதிக்கப்படுவோர் 10 சதவீத மாக உயர்ந்துள்ளது. குறிப்பாக அம்பத்தூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், வளசர வாக்கம், அடையாறு ஆகிய 5 மண்ட லங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. எனவே இந்த மண்ட லங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மைக்ரோ குழுக்கள் மூலம் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறி வுறுத்தப்பட்டுள்ளது.