வணிகர்களுக்கு த.வெள்ளையன் வேண்டுகோள்
சென்னை, மார்ச் 20- கொரோனா வைரஸ் உலகையே அச்சு றுத்தி வரும் நிலையில் வாடிக்கையாளர்க ளுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்களை வழங்க வேண்டும் என வணி கர்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனும் பிரதமரின் அறிவிப்பை ஏற்று சென்னை கோயம்பேடு காய், கனி அங்காடி ஒருநாள் மூடப்படும் என்று வணிகர்கள் அறிவித்துள் ளதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வரவேற்கிறது. அன்று ஒருநாள் தமி ழகமெங்கும் வணிகர்கள் தங்கள் கடை களை அடைத்து கொரோனா குறித்த விழிப்பு ணர்வை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
இந்த இக்கட்டான நேரத்தில் தரமான பொருட்களை கூடிய வரை குறைந்த விலைக்கு விற்பனை செய்து மக்களுக்கு உத விட வேண்டும் என்று வணிகர்களை கேட்டுக் கொள்கிறோம். கொரோனா வைரஸ் தொற்றி லிருந்து தமிழக மக்களைக் காக்கும் விதத்தில், ‘நேரடி டெலிவரி’ என்கிற முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை ஒன்றை தமிழ்நாடு வணி கர் சங்கங்களின் பேரவை அறிவிக்கிறது. கடைகளின் தொலைபேசி, அலைபேசி எண் களைத் தொடர்பு கொண்டு, தேவைப்படும் பொருட்களின் பட்டியலை அளிக்கிற வாடிக்கையாளர்களுக்கு. அவர்களின் வீடு தேடிச் சென்று கடைகளின் ஊழியர்கள் அந்தப் பொருட்களை டெலிவரி செய்ய வார்கள். வணிகர்கள் தங்கள் கடைகளின் தொலை பேசி, அலைபேசி எண்களை கடைகளின் முன்பு பெரிய எழுத்துக்களில் எழுதி வைப்பது அவசியம். அந்த எண்களுக்கு வரும் அழைப்புகளை ஏற்று. வாடிக்கை யாளர்கள் தெரிவிக்கும் பட்டியலை எழுதிக் கொண்டு ஒரு மணி நேரத்திற்குள் வாடிக்கை யாளருக்கு பொருட்களை ஒப்படைக்க வணிகப் பெருமக்கள் முன்வர வேண்டும். கடைகளில் கூடுகிற கூட்டத்தின் காரண மாக அதிகரிக்கிற தொற்று நோய் பரவல் அபாயத்திலிருந்து வாடிக்கையாளர் மட்டு மில்லாமல், கடை உரிமையாளர் ஊழியர்க ளும் இந்த நேரடி டெலிவரி மூலம் பாது காக்கப்படுவர். மக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட இருக்கும் இந்த நேரடி டெலிவரிக்காக கட்டணம் எதுவும் வணிகர்கள் கோர மாட்டார்கள் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தெரிவித்துக் கொள்கி றது. உணவுப் பொருட்கள் உட்பட அத்தியா வசியப் பொருட்களை வாடிக்கையாளர்க ளுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதும் தமி ழக வணிகப் பெருமக்கள் எப்போதும் போல் இப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்படு வார்கள். எனவே. அத்தியாவசியப் பொருட் களை வாங்கிக் குவித்துவிட வேண்டும் என்கிற எண்ணம் தேவையற்றது என்று வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா அபாயத்தைத் தடுப்போம், வாடிக்கையாளர் மற்றும் வணிகர் நலன் காப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.