தமிழகத்தில் வசம் 15 நாட்களில் 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகாமாக இருக்கும் என தலைமை செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை உள்பட பெரும்பாலான நகரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டது.
இது குறித்து தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் அடுத்த 15 நாட்களில் கோவை, திருவண்ணாமலை, நாகை, கடலூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதை எதிர்கொள்ளும் வகையில் இந்த மாவட்டங்களில் கூடுதல் மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமைதான் அனைத்து மாவட்டக் ஆட்சியர்களுக்கும் சண்முகம் எழுதி இருந்த கடிதத்தில், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்றும் கூடுதல் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும் என கூறியிருந்தார். கோயம்புத்தூரில் மட்டும் இதுவரை 20000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, புதிதாக 445 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் இதுவரை இந்த தொற்றில் இருந்து 16,164 கொரோனா நோயாளிகள் மீண்டுள்ளனர். 338 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,80,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் சராசரி எண்ணிக்கை 6,000 ஆக உள்ளது. இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,012 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தமாக கொரோனாவுக்கு 75,062 பேர் உயிரிழந்துள்ளனர்.