சிதம்பரம், ஜூலை 10- குமராட்சி அருகேயுள்ள கூடுவெளி கிராமத்தில் அமைக்கப் பட்டு வரும் அரசு தொழிற்நுட்பக் கல்லுாரியில், முதல் மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான 3ஆம் கட்ட துணை கலந்தாய்வு வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது எனக் கல்லூரியின் முதல்வர் தங்கமணி வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சிதம்பரத்தை அடுத்த குமராட்சி அருகேயுள்ள கூடு வெளி கிராமத்தில் அரசினர் தொழிற்நுட்பக் கல்லுாரி கட்டடம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. கல்லூரி தற்காலிகமாக சிதம்பரத்தில் உள்ள முத்தையா தொழிற்நுட்பக் கல்லூரி யில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டிற்கான சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக் கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி உள்ளிட்ட 6 பிரிவுகளில், 300 மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. அரசு தொழில் நுட்பக் கல்வித் துறை சார்பில், மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இரண்டு முறை நடத்தப்பட்டு 226 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. மீதம் உள்ள 74 இடங்க ளுக்கு 3ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 12ஆம் தேதி முத்தையா பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் நடைபெற உள்ளது. முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு பட்டய படிப்புக்கு சேர விருப்பம் உள்ள மாணவர்கள் சான்றிதழ்களு டன், வரும் 12ஆம் தேதி கல்லுாரி முதல்வரை நேரில் சந்தித்து சேர்க்கை ஆணையை பெற்றுக்கொள்ளலாம்.