சென்னை, பிப்.15- தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை சட்டவிரோதம் என அறிவித்து, அதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பதன் மூலம், இச்சட்டதைக் கொண்டுவந்த பாஜக அரசு சாயம் வெளுத்து சந்தியில் நிறுத்தப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்ற அரசி யல் சாசன அமர்வு ஒத்த கருத்து டன் அளித்திருக்கக்கூடிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஆரம்பத்திலிருந்து இத்திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்) எதிர்த்து வந்ததுடன், உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ(எம்) தொடுத்த வழக்கில் கிடைத்துள்ள மகத்தான தீர்ப்பு என பெருமை கொள்கிறோம். 2017-இல் நிதிநிலை அறிக்கை யில் அறிவித்து, பின்னர் 2018ல் அர சாணை மூலம் ஒன்றிய அரசு இத்திட் டத்தை வெளியிட்டது.
இது தங்கு தடையின்றி நிறைவேற பல்வேறு சட்டங்களைத் திருத்தி பல கட்டுப் பாடுகளைத் தளர்த்தியது. அரசி யல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதில் ரொக்க பரிவர்த்தனையை தவிர்ப் பது, வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும், கருப்புப் பண பரி மாற்றத்தை தடுக்கும் என விந்தை யான காரணங்கள் முன்மொழியப் பட்டன. கடந்த 6 ஆண்டுகளில், தேர்தல் பத்திரம் மூலமான நிதி யில் 80 சதவிகிதத்திற்கும் மேல் பத்திரங்கள் பெற்றது பாஜக.
அரசியல் ஊழலை சட்டப்பூர்வ மாக்கவே தேர்தல் பத்திரம் பயன் படும் என துவக்கத்திலேயே சிபிஐ(எம்) உறுதிபடக் கூறியதோடு, திட் டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் வழக்கும் தொடுத்தது. தேர்தல் பத்திரத்தின் மூலமாக நன்கொடை பெற மாட்டோம் என்கிற கொள்கை முடிவை எடுத்த ஒரே அரசியல் கட்சி சிபிஐ(எம்)தான், இது நீதி மன்ற வாதங்களின் போதும் குறிப்பி டப்பட்டது என்பதை பெருமிதத் தோடு இங்கு முன் வைக்கிறோம். உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், தேர்தல் பத்திரம் நன்கொடை கொடுத்தவர்கள் பிரதிபலன் எதிர் பார்க்காமலா கொடுத்திருப்பார் கள் என்கிற கேள்வியை எழுப்பி யுள்ளது.
ஆளும் கட்சி என்ற அடிப்படையில் மட்டுமின்றி கார்ப்ப ரேட் கம்பெனியின் அடிவருடி என்ற முறையில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை பெற்று குவித்தது பாஜக. கார்ப்ப ரேட்டுகள் இந்தப் பணத்தைக் கொண்டு தேர்தல் ஜனநாயகத்தை பண நாயகமாக மாற்றியதுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி மாற்றங் களை நிகழ்த்தியதுடன் நாடாளு மன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத் தாக்கியது பாஜக. ஆளும் கட்சிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையிலான கள்ளக்கூட்டணி குறித்து, தொடர்ந்து சிபிஐ(எம்) பேசி வருவதற்கு இத்தீர்ப்பு வலு சேர்த்துள்ளது.
கருப்புப் பணத்தைத் தடுப்ப தற்காகவே இத்திட்டம் கொண்டு வரப்பட்டது என்கிற ஒன்றிய அர சின் சொத்தை வாதங்களை நீதி மன்றத் தீர்ப்பு தவிடுபொடி ஆக்கி யுள்ளது. அரசியல் கட்சிகள் நிதி பெறும் நடைமுறையில் ஒளிவு மறைவு இருப்பதும், மக்களின் தக வல் பெறும் உரிமையை மறுதலிப்ப தும் தவறானது என நீதிமன்றம் சாடி யுள்ளது. தேர்தல் பத்திரம் வெளி யிடுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; தேர்தல் பத்திரம் குறித்த அனைத்து விவரங்களை யும் ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ வங்கி தேர்தல் ஆணையத்திடம் அளித்திட வேண்டும்,
வாங்கிய பத் திரம் நிதி கொடுப்பவர் கையிலோ அல்லது அரசியல் கட்சியின் கை யிலோ இருக்கும் பட்சத்தில் அவை திருப்பித் தரப்பட வேண்டும் என வும் நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் நேரத்தில் வந்துள்ள இத்தீர்ப்பு, ஊழலுக்கு அப்பாற் பட்டவர்கள் என்ற போலியான பிம்பத்தை ஊதி பெரிதாக்கும் பாஜகவின் கோட்டையில் விழுந்த பலத்த அடி. நீலச்சாயம் வெளுத்து நரியின் வேஷம் கலைந்து நிற்கிறது பாஜக. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.