tamilnadu

img

பெகாசஸ் விவகாரம்: சென்னையில் காங்கிரஸ் கட்சி  ஆர்ப்பாட்டம்....  

இஸ்ரேல் மென்பொருள் (பெகாசஸ்) மூலம் நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்கள் போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த விவகாரத்தால் மக்களவை முடங்கியது. வரும் 28ஆம் தேதி மக்களவை கூட்டுக்குழு அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற உள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வியாழனன்று (ஜூலை 22) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கே.எஸ்.அழகிரி தலைமையில் முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மனு அளித்தனர்.

;