சென்னை,ஜூலை 19- தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் முறை கேடு என்று பா.ஜ.க. தமிழக தலைவர் கூறிய குற்றச் சாட்டை காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி மறுத்துள்ளார். தில்லியில் செய்தி யாளர்களிடம் பாஜக தலை வர் முருகன் கூறுகையில், காமராஜரால் உரு வாக்கப்பட்ட சென்னை காமராஜர் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை, மும்பையைச் சேர்ந்த கட்டு மான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ள தாகவும், இது குறித்து வரு மானவரித்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார். இந்த குற்றச்சாட்டை தமிழக காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி மறுத் துள்ளார். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என தமிழக பா.ஜ.க. தலைவர் பேசியுள்ளார் .பெருந்தலை வரின் வழியில் இதய சுத்தியோடு, ஏழைகளுக் காக, நேர்மையாக பணி யாற்றுகிறது அறக்கட்டளை என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.