சென்னை,ஆக.13- வரிகளை மறுபங்கீடு செய்வது தொடர்பாக 16வது நிதிக்குழு முன்பு ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக் கும் இடையே கடுமையான மோதல் ஏற்படும் என்று கேரள முன்னாள் நிதி யமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித் தார்.
சென்னையில் ஆசிய இதழியல் கல்லூரி (ஏசிஜே) மற்றும் பாரதி புத்தகாலயம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், ‘இந்தியாவில் ஒன் றிய - மாநில அரசு நிதி உறவுகள் - சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்வதற்கான வழி’ என்ற தலைப் பில் தாமஸ் ஐசக் பேசினார். அப் போது இவ்வாறு கூறிய அவர், ஒன்றிய அரசின் செஸ் மற்றும் கூடுதல் வரி மற்றும் மாநிலங்களுக்கு மொத்த வரி வசூலில் இருந்து பகிர்ந்து அளிப்பதை சுற்றியே இந்த மோதல் இருக்கும் என்றார்.
கடந்த 2015-16 மற்றும் 2018-19 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஒன்றிய அரசு விதித்த செஸ் மற்றும் கூடுதல் வரி மூலமாக கிடைத்த வரி வருவாயில் இருந்து மாநிலங்கள் ரூ.5.26 லட்சம் கோடியை இழந் தன. இதனால் கூடுதல் வரி விதிப் பின் மூலமாக கிடைக்கக்கூடிய வரு வாயையும் மாநிலங்களுக்கு கிடைக் காமல் ஒன்றிய அரசு சுருக்கிவிட்டது.
வளங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஒன்றிய - மாநில அரசு களுக்கு இடையே உரிய அளவு கோல்கள் இருக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதி காரப் பகிர்வு என்பது சமபங்கு கொள்கையின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும். ஆனால் அது தற்போது மாநில அரசுகள் பொறுத்துக் கொள்ளமுடியாத அளவுக்கு சென்றுவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒன்றிய அரசு வசூலித்த வரிகளில் 29 விழுக்காடு மட்டுமே தமிழ்நாட்டிற்கு திரும்பி வருகிறது. மகாராஷ்டிரா விற்கு 10விழுக்காடும் கேரளத்திற்கு 57 விழுக்காடும் வழங்கப்படு கிறது. உத்தரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்கள் மற்றும் சத்தீஸ்கர் போன்ற சிறிய மாநிலங்கள் அதிக அளவு பங்கை பெறுகின்றன என்றும் பின்தங்கியுள்ள பல மாநிலங்களுக்கு அதிக பகிர்வு கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
மொத்த வரிவசூல் தொகையில் இருந்து அதிக பங்கைப் பெற்ற பின்தங்கிய மாநிலங்கள், தனிநபர் வரு மானத்தில் சிறப்பான இடத்தை பிடிக்க வில்லை. உதாரணமாக, பீகார் மாநில தனிநபர் வருமானம் 1991 இல் தேசிய சராசரியில் 56விழுக்காடாக இருந்தது, ஆனால் அது இப்போது 29விழுக்காடாக குறைந்துள்ளது. முன்னேறிய தமிழ்நாடு மற்றும் கேரளம் போன்ற மாநிலங்கள் தனிநபர் வரு மானத்தை அதிகரித்துள்ளன. இருந்த போதிலும் இந்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு போதுமான வரி பகிர்வை அளிக்க மறுக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்து குழுமத்தின் இயக்குநர் என். ராம் பேசுகையில், சமூக நலத் திட்டங்களில் அதிக முதலீடு செய்துள்ள இடதுசாரிகள் ஆளும் கேரள மற்றும் திமுக ஆளும் தமிழகத்தில் மாநில அரசின் நிதி நிலைமையை நெருக்க டிக்கு உள்ளாக்கும் வகையில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் அமைந்துள் ளன என்றார். ஒன்றிய அரசு எப்படி மாநில அரசுகளை பாகுபாட்டுடன் நடத்துகிறது என்பதற்கு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் பட்ஜெட் சாட்சியாக விளங்குகிறது என்றும் அவர் கூறினார். ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையே நியாயமான வரி பகிர்வு இருக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பொருளாதார அறிஞரும் பேராசிரியருமான டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா பேசுகையில், ஜிஎஸ்டி அறிமுகத்திற்குப் பிறகு லெவி, கூடுதல்வரி விதிப்பதற்கான மாநில அரசுகளின் அதிகாரத்தை ஒன்றிய அரசு கட்டுப்படுத்தி விட்டதாக கூறி னார். இப்போது பெட்ரோல் டீசல் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றின் மீது மட்டுமே கூடுதல் வரியை மாநில அரசுகளால் விதிக்கமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆசிய இதழி யல் கல்லூரி தலைவர் சசி குமார் வர வேற்றார். பாரதி புத்தகாலய நிர்வாகி கே.நாகராஜ் நன்றி கூறினார்.