சென்னை, ஜூன் 24- “சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு விரைந்து மேற்கொள்ள வலியுறுத் தும் விதமாக இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்” என்று முதல் வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள் ளார்.
சட்டப்பேரவையில் திங்க ளன்று (ஜூன் 24) பள்ளிக் கல்வி, உயர் கல்வி மற்றும் வருவாய்த் துறை ஆகிய மானியக் கோரிக்கை கள் மீது விவாதம் நடைபெற்றது. இதில், பாமக எம்எல்ஏ கோ.க. மணி பேசும்போது, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்து வது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச் சர் மு.க.ஸ்டாலின், “இப்போது நீங் கள் எந்தக் கூட்டணியில் இருக்கி றீர்கள் என்பது உங்களுக்கு நன் றாகத் தெரியும். எனவே, அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெ டுப்பு நடத்தி, அதற்குப் பிறகுதான் அதை அமல்படுத்த முடியும். ஏற்கெ னவே, பீகார் மாநிலத்தில் இது போன்ற கணக்கெடுப்பு நடத்தப் பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில் உறுப்பினர் அவர் களுக்கு நினைவுபடுத்த விரும்பு கிறேன்.
உறுப்பினர் கோ.க. மணி சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண் டும் என இங்கே பேசி, அதற்கு நம்மு டைய அமைச்சர்கள் உரிய விளக் கங்கள் அளித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்று சொன் னால், சாதி வாரியாக கணக்கெ டுப்பு, மக்கள் தொகை கணக்கெ டுப்புடன் ஒன்றிய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொட ரிலேயே ஒரு தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அதற்கு கோ.க. மணி ஆதரவு தர வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
பாமக வெளிநடப்பு
எனினும், கோ.க. மணி, சாதி வாரிக் கணக்கெடுப்பு பிரச்சனை குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். அமைச்சர் கள் நீண்ட விளக்கம் கொடுத்தா லும், அவர் தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. இதை யடுத்து, அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரமும் முடிந்தது. திரும்ப திரும்ப ஒரே பிரச்சனையை பேசிக்கொண்டே இருந்தார். பிறகு, அவரும் பாட் டாளி மக்கள் கட்சி உறுப்பினர் களும் பேரவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.