சென்னை,அக்.30- சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நவம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் லியோ பட வெற்றி விழாவுக்கு காவல் துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்.19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இந்த படம் முதல் வாரத்தில் மட்டும் ரூ.461 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இதையடுத்து படத்தின் வெற்றி விழாவை நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளை யாட்டு அரங்கில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.மேலும் விழாவுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காவல்துறை யினரிடம் படத் தயாரிப்பு தரப்பு கடிதம் கொடுத்திருந்தது.
இந்த நிலையில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் லியோ பட வெற்றி விழாவுக்கு காவல்துறை நிபந்தனைக ளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இதில், லியோ வெற்றி விழாவை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும். நேரு விளையாட்டு அரங்கில் உள்ள இருக்கைகளுக்கு ஏற்ற வாறு ரசிகர்களை அனுமதிக்க வேண்டும். அனுமதித்த எண்ணிக்கையில் டிக்கெட்டுகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும். 200-300 கார்களுக்கு மட்டும் அனு மதி, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பேருந்தில் வர அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.