tamilnadu

img

பிரதமரின் வெறுப்பு அரசியலுக்கு கண்டனம்

பிரதமர் மோடியின் வெறுப்பு அரசியல் பேச்சை கண்டித்தும், அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதி குழு சார்பில் எம்.கே.பி. நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.கோடீஸ்வரி, எம்.ராஜ்குமார், திமுக பகுதிச் செயலாளர் அ.முருகன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெ.டில்லிபாபு, சி.பி.ஐ. நிர்வாகிகள் ஜி.சுப்பிரமணி, வசந்தகுமார், கோட்டி சுரேஷ், விசிக பொறுப்பாளர் தமிழினியன், கல்தூண் ரவி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சுபேர், கம்ரூதீன், மனிதநேய மக்கள் கட்சியின் பகுதி செயலாளர் அனிபா, முகமது சிராஜ் சிபிஎம் நிர்வாகிகள் அரி, எஸ்.ஏ.வெற்றிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.