tamilnadu

img

தோழர் செங்கொடி நாராயணசாமி காலமானார்

தோழர் செங்கொடி நாராயணசாமி காலமானார்

மதுராந்தகம், மே 4- மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சி, மலைப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தோழர் செங்கொடி என்.நாராயணசாமி உடல் நலக்குறைவால் சனியன்று (மே 3) காலமானார்.  50 ஆண்டுகாலம் கம்யூனிஸ்ட் கட்சி யில் தன்னை இணைத்துக் கொண்டு போராட்டங்களில் பங்கேற்று கருங்குழி பேரூராட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலராக பணியாற்றியவர். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொறுப்புச் செயலாளர் எம்.செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர் மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. அரிகிருஷ்ணன், க.பகத்சிங் தாஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் டி.கிருஷ்ணராஜ், ஜி.மோகனன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.அர்ஜுன் குமார், வி.திருமலை, மதுராந்தகம் அச்சரப்பாக்கம் கட்சி இடைக்கமிட் உறுப்பினர்கள் கிளைச் செயலாளர்கள் கட்சி உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது இறுதி நிகழ்வுகள் ஞாயிறன்று (மே 4) மாலை நடைபெற்றது.