tamilnadu

img

தோழர் எஸ்.தண்டபாணி உடல் அடக்கம் செய்யப்பட்டது

சென்னை, மார்ச் 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுர வாயல் பகுதி மூத்த தோழரும், 149 வது வட்டம்,  மீனாட்சி நகர் ஏ கிளை உறுப்பினருமான தோழர் எஸ்.தண்டபாணி (வயது 68) உடல்  திங்களன்று (மார்ச் 16) அடக்கம் செய் யப்பட்டது. 1972ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், வடபழனி பகுதி யில் கிளைச்செயலாளர், கிண்டி-தாம்பரம்  பகுதிக்குழு உறுப்பினராக செயலாற்றி கட்சியை கட்டுவதில் முக்கிய பங்காற்றினார். தோழர் அரிபட் தலைமையில் செயல்பட்ட சினிமா லேப் டெக்னிஷியன் சங்கத்தில் இணைந்து  முன்னணி ஊழியராக செயலாற்றினார். ஆழ்வார் திருநகரில் உள்ள இல் லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சி யின் தென்சென்னை மாவட்டச் செயலா ளர் ஏ.பாக்கியம், மாநிலக்குழு உறுப்பி னர் சி.கல்யாணசுந்தரம், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் ச.வெள்ளைச்சாமி, ச. லெனின், மத்திய சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஜி.காசிநாதன், விருகம் பாக்கம் பகுதிச் செயலாளர் வி.தாமஸ் உள்ளிட்  டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விருகம்பாக்கம் இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.