tamilnadu

img

இந்திய கம்யூனிச இயக்கத்தின் முன்னோடி தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தின சொற்பொழிவு

இந்திய கம்யூனிச இயக்கத்தின் முன்னோடி தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தின சொற்பொழிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ‘இந்திய அரசியலமைப்பு ஜனநாயகத்தை சீர்குலைக்கும் கார்ப்பரேட் மதவாதக் கூட்டு’ எனும் தலைப்பில் உரையாற்றினார். இந்த உரையை பாரதி புத்தகாலயம் நூலாக கொண்டு வந்துள்ளது. இந்த நூலை வெள்ளியன்று (மார்ச் 15) சென்னையில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பெற்றுக்கொண்டார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாநிலக்குழு உறுப்பினர்கள் க.நாகராஜன், ஏ.ஆறுமுகநயினார் ஆகியோர் உடன் உள்ளனர்.