tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : தோழர் பி.ராமச்சந்திரன் புகழ் நிலைத்து நிற்கும்...

தோழர் பி.ராமச்சந்திரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பு துவங்கி மாநிலக்குழு, மாநில செயற்குழு, மத்திய குழு, மத்திய செயற்குழு, அரசியல் தலைமைக்குழு என தன்னுடைய உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் கிடைத்த பொறுப்பு அனைத்துக்கும் நியாயம் வழங்கியவர். மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னைஇணைத்துக் கொண்ட அவர் சிறை, சித்ரவதை என அனைத்தையும் இன்முகத்தோடு ஏற்றுக் கொண்டவர். தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது, ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தில் பலம்வாய்ந்த இயக்கமாக உருவாக்குவதில் அவருடைய பங்கு மகத்தானது. பல்வேறு தொழிற்சங்க போராட்டங்களுக்கு தலைமை வகித்தவர். மார்க்சிய சித்தாந்தத்தை எளிமையாக அனைவருக்கும் புரிய வைக்கும் நல்லாசிரியர். தமிழகத்தில் மாணவர், வாலிபர், இயக்கம் வலிமை வாய்ந்த இயக்கங்களாக உருவானதில் இவருடைய பங்களிப்பு சிறப்பானது. பி.ஆர்.சி என தோழர்களால் அன்போடு அழைக்கப்பட்ட இவர்,பலநூறு ஊழியர்களை உருவாக்கி இயக்கத்திற்கு கொண்டு வந்தவர்.  எல்லோரிடமும் இனிமையாக பழகக்கூடிய இவர் ஓர்  அப்பழுக்கற்ற கம்யூனிஸ்ட்டாக தன்னுடைய வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டவர். அவரால் உருவாக்கி வளர்க்கப்பட்ட இயக்கத்தை போற்றிப் பாதுகாத்து வளர்ப்பதே அவரை என்றென்றும் நினைவுகூர்வதாக அமையும்.

இன்று (ஜூலை 8) தோழர் பி.ராமச்சந்திரன் நினைவு நாள்

;