tamilnadu

img

விவசாயத்தொழிலாளர் சங்க தலைவர் தோழர் பி.ராகவன் மறைவு... தமிழ்நாடு மாநிலக்குழு இரங்கல்...

சென்னை:
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் இணைச்செய லாளரும்  கேரளா மாநிலப் பொருளாளருமான தோழர் பி.ராகவன் பிப்ரவரி 22 அன்று காலமானார். அவரது மறைவுக்கு விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநிலப் பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

தோழர் பி.ராகவன் அவர்கள்கேரளா மாநிலத்தில் விவசாயத் தொழிலாளர்களை அணி திரட்டுவதிலும் திரட்டிய தொழிலாளர்களை  சங்கமாக்கி செங்கொடி இயக்கத்தில் அணிவகுக்க வைத்ததிலும் பெரும்பங்கு வகித்தவர். குறிப்பாக கொல்லம்மாவட்டத்தில் விவசாயத்தொழிலா ளர்களின் அன்புக்குரிய தலைவராக விளங்கினார். கொல்லம் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பொதுமக்களின் நன்மதிப்பை பெற்று பணியாற்றியவர். உடல் நலிவுற்று திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பிப்ரவரி 22 அன்று காலமானார்.

அன்பு தோழர் பி.ராகவன் மறைவிற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில்  சார்பில் புகழஞ்சலி செலுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

;