tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

தோழர் என்.வரதராஜன் நினைவு தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் என்.வரதராஜன் நினைவுதினத்தையொட்டி வியாழனன்று திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் கம்பிளியம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி உள்ளிட்ட தலைவர்கள் செவ்வணக்கம் செலுத்தினர். கட்சியின் மாநிலக் குழு அலுவலகம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தோழர்  என்.வரதராஜன் நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது.

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம்

கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆவடி ரவுண்டானா  அருகே சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் மா.பூபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதி நிர்வாகிகள் எம்.ராபர்ட்ராஜ், கே.எம்.தியாகராஜன்,  ஆர்.ராஜன், சு.பால்சாமி, குணசேகரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

கேஸ் விலை உயர்வை கண்டித்து சிபிஎம் பெரம்பூர் பகுதிக்குழு சார்பில் அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி அருகே பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ராஜ்குமார், ஜி.நித்யராஜ் ஆகியோர் பேசினர்.

கேஸ் விலை உயர்வை கண்டித்து பெண்கள் போராட்டம்

அத்தியாவசிய பொருட்களின் விலை தினசரி உயர்ந்து வரும் நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தி ஏழை எளிய நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அம்பத்தூர் பகுதிக்குழு சார்பில் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே செயலாளர் பா.மகாலட்சுமி  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, நிர்வாகிகள் எஸ்.நர்மதா, எஸ்.கஸ்தூரி,  வி.செம்மலர், ஆர்.சுனிதா, சிபி, ராகினி, அனுராதா, லட்சுமி, மெடில்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தி ஏழை எளிய நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மணலியில் எஸ்.நீலவேணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் எம்.கோட்டீஸ்வரி, நிர்வாகிகள் எஸ்.ராணி, உஷா, லதா, பானுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒன்றிய அரசின் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து புதனன்று (ஏப்.9) அயப்பாக்கத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரவாயல் பகுதி பொருளாளர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.