tamilnadu

img

தோழர் கே.வைத்தியநாதன் உடல் தகனம்

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், சிஐடியு வின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான தோழர் கே.வைத்தியநாதன் சனிக்கிழமையன்று (ஆக.9) காலமானார். அவருக்கு வயது 98. அன்னாரது உடன் அன்றையதினமே மயிலாப்பூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ. வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

சிஐடியு தலைவர்கள் அஞ்சலி
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் செயலாளர் வி.குமார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம் மேளன பொதுச்செயலாளர் கே. ஆறுமுக நயினார், சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், தென்சென்னை மாவட்டச் செயலாளர்  பா.பாலகிருஷ்ணன், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கே. விஜயன், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வி.தயானந்தன், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், பொருளாளர் ஏ.எல்.மனோகரன், தமிழ்நாடு தையல் தொழிலாளர் சம்மேளன தலைவர் பி.சுந்தரம், சிவில்சப்ளைஸ் சம்மேளன நிர்வாகி ஆர்.புவனேஸ்வரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், எச்.வசந்தி மற்றும் வசந்தா உள்ளிட்டோர்அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான், மூத்த தலைவர் நம்பிராஜன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

;