tamilnadu

உந்தன் வழியில் நாங்களும்...

தோழர் ஏ.பி. - தமிழக உழைக்கும் மக்களின் உள்ளங்களில் நிறைந்தவர்; இல்லங்களில் உறைந்தவர்; இலக்கிய ஆர்வலராய் திகழ்ந்தவர்; இயக்க ஆதர்சமாய் மிளிந்தவர்; வழக்கு மன்றத்தில் ஒளிவிளக்கு; மக்கள் மன்றத்தில் வழிகாட்டி; சட்டமன்றத்தில் சரமாரிப் பொழிவு; தொழிலாளர்களின் உற்ற துணைவன்; ஏழை - எளியவர்களின் இதயம் நிறை தலைவன்; கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கலங்கரை விளக்கு; மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்; அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்; தொண்டால் பொழுதளந்து; தியாக நெருப்பில் புடம்போட்டு நன்றாம் வாழ்க்கையை நானிலம் பெறவே; உண்டாம் வழியது; உயர் சிறப்பு மார்க்சியமே என்றே உரைத்தாய்; நன்றே உழைத்தாய்; மனிதர் யாவரும் சமமாய் வாழ; மாபெரும் சமரில் முன் நின்றாய்; உந்தன் வழியில் நாங்களும் பின்பற்றிச் செல்வோம்; முன்னேற்றம் காண்போம். 

செப். 5 தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் நினைவு நாள்

;