tamilnadu

img

பணி நிறைவு பாராட்டு விழா

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலைப் பொறியாளராக பணியாற்றிய  பி.எஸ்.பார்த்தசாரச்தி செவ்வாயன்று (டிச. 31) பணி ஓய்வு பெற்றார். இவர் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மேற்கு கிளை துணைத் தலைவராகவும், தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் மாநிலத் துணைத் தலைவராகவும் செயல்படுகிறார். இவரது பணி நிறைவு பாராட்டு விழா சென்னை அண்ணாநகரில் மேற்கு கிளை செயலாளர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பார்த்தசாரதி தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ. 5 ஆயிரமும், நிர்மல் பள்ளிக்கு ரூ. 5 ஆயிரமும், மின்கதிர் இதழுக்கு ஆயிரம் ரூபாயும் மாநிலச் செயலாளர் கே.ரவிச்சந்திரனிடம் வழங்கினார். மாநிலத் தலைவர் ஜெய்சங்கர், துணை பொதுச் செயலாளர் கே.அருள்செல்வன்,  உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு கன்வீனர் எம்.தனலட்சுமி, மேற்கு கிளை பொருளாளர் கனேஷ்ராவ், முனியாண்டி  உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

;